tag:blogger.com,1999:blog-67159787443240042442023-11-15T23:39:24.657-08:00tnta health forumRAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-33219158289161413462019-04-28T02:45:00.000-07:002019-04-28T02:45:03.682-07:00தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்....!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை
சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத்
தருகிறது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக்
குணப்படுத்த உதவுகிறது.<br />
தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு
வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6,
மக்னீசி<span class="text_exposed_show">யம் போன்றவற்றைப் பெறலாம்.</span><br />
<div class="text_exposed_show">
பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும்
குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து
உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள
மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.<br />
பேரீச்சையில்
நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது.
பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும்
உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக்
குறைக்கிறது. <br />
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3
பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன்
வைத்துக் கொள்ளலாம்.<br />
இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும்
செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும்
சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும்,
ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. <br />
குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக்
குறைக்க உதவுகிறது.<br />
பேரீச்சையில் உள்ள வைட்டமின் மற்றும்
பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச்
செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக
மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.<br />
'பேரீச்சை சாபிடுவதால் மலச்சிக்கலைச் சரிசெய்வதோடு, முதல்நாள் இரவே மூன்று
பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக்
குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.</div>
</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-36980550315254739742019-04-28T02:42:00.003-07:002019-04-28T02:42:38.362-07:00இவை தான் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது என்பது தெரியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அளவுக்கு அதிகமான நீர்<br />
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர்
நீரைக் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என முன்பு
படித்திருப்பீர்கள். ஒரு நாளில் ஒருவர் நீரை மட்டும் குடிப்பதில்லை.
அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம்.
எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இல்லை.
எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தைக் குடிக்கிறார்களோ,
அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.<br />
சிறிய சிறுநீர்ப்பை<br />
ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில்
மாற்றம் உள்ளதோ, அதேப் போல் உள்ளுறுப்புக்களின் அளவும் ஒவ்வொருவருக்கும்
வேறுபடும். பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும்.
எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர்
அவரசமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1-1.5 கப்
சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி
சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு
சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.<br />
உடல் வறட்சி<br />
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு உடல் வறட்சியும் ஓர் காரணம் என்று கூறுவது
சற்று ஆச்சரியத்தை வழங்கலாம். எப்படி உடலில் போதிய நீர் இல்லாமல், சிறுநீர்
உற்பத்தியாகும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் ஆய்வு ஒன்றில், உடலில்
போதுமான அளவு நீர் இல்லாத போது, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும்.
சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருக்கும் போது, அது சிறுநீர்ப்பையில் எரிச்சலை
உண்டாக்கி, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும்.<br />
சிறுநீரக கற்கள்<br />
நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும்
இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக
கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக
கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது
எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும்
சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே
மருத்துவரை அணுகுங்கள்.<br />
பலவீனமான இடுப்பு தசைகள்<br />
இடுப்புப்
பகுதியைச் சுற்றிய தசைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதி பலவீனமாக இருந்தால்,
அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும். இடுப்பு பகுதியில் உள்ள தசைகள்
தான் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர்ப்பையை சுருங்கச் செய்து, சிறுநீரை
வெளியேற்றுகிறது. இத்தகைய இடுப்பு தசைகள் போதிய வலிமையுடன் இல்லாவிட்டால்,
அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
இதனைத் தவிர்ப்பதற்கு இடுப்பு தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய
வேண்டும்.<br />
குறிப்பிட்ட மருந்துகள்<br />
நீங்கள் உயர் இரத்த
அழுத்தம், சரும அலர்ஜி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு மாத்திரைகளை
எடுப்பவர்களாயின், தற்காலிகமாக சிறுநீர்ப்பை பலவீனமாகி, அடிக்கடி சிறுநீரை
கழிக்கச் செய்யும். ஆகவே இம்மாதிரியான பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி,
அவரிடம் உங்களது பிரச்சனையைக் கூறி, தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்.<br />
அடிவயிற்றில் சிறுகட்டி<br />
அடிவயிற்றுப் பகுதியில் சிறு கட்டிகளின் வளர்ச்சி இருந்தால், அதுவும்
ஒருவரை அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்யும். ஏனெனில் இந்த கட்டிகள்
சிறுநீர்ப்பையில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் போது, அவசரமாக சிறுநீர்
வருவது போன்ற உணர்வு எழும். எனவே இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி
ஸ்கேன் செய்து தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே நீண்ட நாட்களாக
இப்பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுங்கள்.<br />
தாழ் இரத்த அழுத்தம்<br />
உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், தலைச்சுற்றல், உடல்
சோர்வு போன்றவற்றுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும். எனவே
உங்களுக்கு தாழ் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே
மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சையை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.<br />
இறுதி மாதவிடாய்<br />
45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த
காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள்.
இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர்
மாற்றத்தால், சிறுநீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக்
கழிக்கச் செய்கிறது.</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-61290622398454320032019-04-28T02:34:00.000-07:002019-04-28T02:34:32.138-07:00#கருஞ்சீரகத்தை_இப்படி_பயன் #படுத்தினால்_சர்க்கரை_விட்டு #ஓடிப்போகும்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">கருஞ்சீரகம்</span></span></a>.<br />
இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர்
வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த
அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட
விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.<br />
<div class="text_exposed_show">
அதனால் நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.<br />
<a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">எப்படி_பயன்படுத்தலாம்</span></span></a>?<br />
உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு
அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப்
பயன்படுத்தலாம்.<br />
இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில்
கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து
விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.<br />
கொலஸ்ட்ராலை<br />
குறைக்க கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள்
நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக்
குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கின்றன.<br />
அவை பொடியை விடவும் அதிகப்படியான நன்மைகளை மிக
வேகமாகக் கொடுக்கும். தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ
சேர்த்து வந்தால் மிக வேகமாக உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை
உங்களால் நன்கு உணர முடியும்.<br />
<a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">புற்றுநோய்எதிர்ப்பு</span></span></a><br />
கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில
முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய
புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த
கருஞ்சீரகம்.<br />
கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.<br />
<a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">எடைகுறைப்பு</span></span></a><br />
நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும்
தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப்
படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால்
எப்படியிருக்கும்.<br />
அப்படி எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க
உங்களுக்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தை வெறும்
வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும்.<br />
பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து
அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும்
சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.</div>
</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-47189042106477357162019-04-28T02:33:00.000-07:002019-04-28T02:33:34.538-07:00மனசிக்கலும் மலச்சிக்கலும்… மன சிக்கல் (Depression) எப்படி காரணமாகிறது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">மனசிக்கலும்_மலச்சிக்கலும்</span></span></a> பற்றிப் பார்க்க இருக்கிறோம். மனதில் சிக்கல் (Depression) இருந்தால் மலச்சிக்கல் வரும்.<br />
மனதில் வேண்டாத குப்பைகள், தானாக சேர்ந்த குப்பைகள், மற்றவர்களால்
சேர்க்கப்பட்ட குப்பைகள் சேர்ந்து மலச்சிக்கலை க்ஷ்கட்டாயமாக ஏற்படுத்தும்.<br />
சர்க்கரை நோயோ ரத்த அழுத்தமோ ஒரு நோய் கிடையாது. ஆனால், மலச்சிக்கல்
என்பது நோய். அதைத் தீர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலைக் கொல்லும்
ஆனால் சிறுக சிறுக…<br />
சில காரணங்கள்<br /> உணவு, வாழ்வியல் பழக்கம், இட
மாற்றம், சூழல் இவை பொதுவான காரணங்களாக சொல்லப்பட்டாலும் மனச்சிக்கல் ஒரு
பெரும் காரணம். முதலில் கண்டறிய வேண்டியது இதைத்தான்.<br />
காலைக்கடன் என்பது காலையில் தீர்க்க வேண்டிய ஒன்று<br />
சமீபத்தில் சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒருவர். காலில் உள்ளங்கை அளவு
புண்… சீழ் வழிந்து, நின்று போய் கட்டுப்போட்டு வந்தார். அவரின் கால்கள்
கரியால் பூசப்பட்டதுபோல அவ்வளவு கருப்பாக இருக்கிறது.<br />
அவ்வளவும் கெட்ட ரத்தம்… அவ்வளவும் குப்பை… மனதில், உடலில் தேங்கியிருக்கிறது.<br />
காலைக்கடன் என்பதற்கான அர்த்தமே காலையில் போக வேண்டியது எனப் புரிந்து
கொள்ள முடியும். “அதற்கு நேரம், காலம் இல்லை எப்போது வேண்டுமானால் வரலாம்.
இரண்டு நாள் அல்லது மூன்று நாள்கூட ஆகும்” என்கிறார் அவர் மனைவி.<br />
மலத்தை வெளியே தள்ளும் நேரம் காலை 5-7 இது பெருங்குடலுக்கான நேரம். மலத்தை
தள்ளிக்கொண்டு மலத்தை வெளியேற்ற துரிதமாக செயல்படும் நேரம் அது. இதை
தவறினால் நீங்கள் ஆரோக்கியத்தைத் தவற கூடும். கவனம் இருக்கட்டும்.<br />
மனம் எப்படி சிக்கலாகிறது? (Depression)<br />
தனக்கு பிடிக்காத வாழ்க்கை, தனக்கு பிடிக்காத வேலை, தனக்கு பிடிக்காத
சூழல், தனக்கு பிடிக்காத துணை, தனக்கு பிடிக்காத படிப்பு, தனக்கு பிடிக்காத
உறவுகள், தனக்கு பிடிக்காத அனைத்துமே மனச்சிக்கல்தான். இதனால்
மலச்சிக்கலும்தான்.<br />
இது அவரவர் தங்கள் சூழலை பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது.<br />
மன சிக்கல் மலச்சிக்கலை மட்டுமல்ல வாழ்க்கையே சிதைக்கும்.<br />
ஆம்… அதற்கு உதாரணமாக ஒருவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். கால்களில் சீழ்
வழிந்து கொஞ்சம் ஆறியும் ஆறாமலும் ஒரு பெரிய புண், இரண்டு கைகளில் ஆங்காகே
கட்டிகள்… மேலே நான் சொன்ன அதே நபர்தான்.<br />
கால் முழுக்க கெட்ட ரத்தம்
தேங்கி, கருகி கிடக்கிறது. மூளை மழுங்கி ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10
விநாடிகள் சிந்தித்து தொடர்பே இல்லாத பதிலை தொடர்பு படுத்தி சொல்ல
முயற்சிக்கிறார். அவ்வளவும் மனக்குழப்பம்.<br />
ஏன் இவ்வளவு
மனக்குழப்பம். மிலிட்டிரி பள்ளியில் படிக்க வைக்க மிலிட்டரியாகவே மாறிய
தந்தை. எதிர்க்க முடியாத தாய். 8 சகோதர சகோதரிகளைப் பிரிந்து தான் மட்டும்
ஹாஸ்டல் வாழ்க்கை.<br />
ஹாஸ்டல் படிப்பு பாதி, சோகம் மீதி. பிடிக்காததும் பிடித்ததும் நடந்ததா என்று கூட நினைவுப்படுத்த தெரியவில்லை.<br />
இருப்பினும் பொறியியல் பட்டப்பிடிப்பு. தான் படிக்க விரும்பியதைத் தடுத்து
தந்தையின் விருப்பப் படிப்பை மகன் படிக்கிறான். தொடர் தோல்வி மகனுக்கு…<br />
விளைவாக ஹரியஸ்… கஷ்டப்பட்டு ஹரியஸ் கிளியர் செய்கிறார். மீண்டும்
தந்தையின் கட்டாயத்தில் அரசு துறைகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறார்.
மத்திய அரசாங்க வேலை கிடைக்கிறது.<br />
கை நிறைய சம்பளம்.. மத்திய
அரசாங்க வேலை… எல்லாமே நன்றாக நடந்து முடிந்திருக்கிறது என அப்பா
ஆனந்தமடைகிறார். இதில் அப்பாவுக்கு மட்டுமே ஆனந்தம்.<br />
மத்திய அரசாங்க
வேலையில் இருப்போருக்கு மனக்குழப்பமே மிச்சம். வேலை செய்கிறார் தன்
திறனால் செய்ய முடிந்ததை செய்கிறார். அவ்வளவுதான்.<br />
மனம் குழப்பம் முற்றியது. புத்தி மழுங்கியது. அப்பாவின் ஆபரேஷன் சக்ஸஸ். ஆனால், மகன் தோல்வி அடைந்துவிட்டான்.<br />
தன் கனவுகளில், தன் சூழலில், தன் லட்சியத்தில், தன் வாழ்க்கையில் அவன் படுதோல்வி அடைந்துவிட்டான்.<br />
சமூகமும் தூரத்து உறவுகள் கொஞ்சம் ஒரு மாதிரி, ஆனால் அரசாங்க வேலை இருக்கிறது எனத் தங்க குண்டூசியில் குத்துகிறது.<br />
கிடைத்த பெண்ணை வைத்து தந்தையும் குடும்பமும் சேர்ந்து, திருமணத்தை நடத்தி
வைக்கின்றனர். அவ்வப்போது பணம் கொடுத்து கொஞ்சம் உண்மையும் கொஞ்சம்
பொய்யும் கலந்து வாழ செய்யும் ஏற்பாடுகளை முழுமூச்சாக செய்கின்றனர்.<br />
”இல்லறம் இருந்தால்தான் குழந்தைகள் வரும். இங்கு நானே பல ஆண்டுகளுக்கு
முன்பு தொலைந்துவிட்டேன்… தோற்றுவிட்டேன்… எங்கிருந்து குடும்பத்தை நடத்த…”
என்று மகன் நினைக்கிறான். ஒர் உயிருடன் இப்போது இரண்டு உயிர்களுக்கும்
பாதிப்பு… வாழ்க்கையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. ஆனால், பணமும் நோயும்
நிறையவே இருக்கிறது.<br />
“எங்கள் அப்பா 9 பிள்ளைகளை நன்றாக படிக்க
வைத்தார். எல்லோரும் டாப்பாக இருக்கிறோம். இவன் ஒருவன்தான் புத்தி
சரியில்லாமல் இருக்கிறான்” என்று சொல்கிறார் வந்தவரின் அக்கா.<br />
Operation Success but patient died என்பார்களே அதை நான் நேரில்
பார்க்கிறேன். 48 கால வாழ்க்கை திரும்ப கிடைக்குமா? இளமைக்காலம்? தன்
கனவுகள்? தான் யார்? தான் என்னவாக இருக்க கனவு கண்டோம்? எதுவுமே தெரியாமல்
சிந்தித்தபடியே நிற்கிறார் மகன்.<br />
அவரைப் பார்க்கையில் என் கண்களுக்கு உடல் மட்டுமே தெரிகிறது…<br />
இந்த சூழலுக்கு ஆளாக்கிய தன் தந்தை இன்று இல்லை. ஆனால், அவர் விதைத்துவிட்ட வினை ஆலமரமாய் நிற்கிறது.<br />
மனநல மருத்துவர்கள் பக்கம் பக்கமாய் மருந்து கொடுத்துள்ளனர். புண்கள் ஆற அலோபதி மருத்துவர்களும் மருந்து கொடுத்துள்ளனர்.<br />
உடலுக்கு வயது 48 ஆக இருக்கிறது. மனம் மட்டும் இளமைப் பருவத்தில்
பொறியியல் இறுதி ஆண்டிலே நின்றுவிட்டது. அதற்கு மேல் அவருக்கு நகரவில்லை.
நினைவும் இல்லை.<br />
மனம் செயல் இழந்துவிட்டது. உயிர் மட்டும் உடலில் கிடக்கிறது ஒரு ஓரமாக… ஏன் என்பது அவருக்கும் தெரியவில்லை.<br />
மனிதன் இழக்க வேண்டியதை அனைத்தும் இழந்து புத்தி செயல்படாமல் இருக்கும்
நபரை பார்க்கும் மனைவிக்கும் கஷ்டம். உடன் பிறந்தவர்களுக்கு கஷ்டம்.<br />
பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்<br /> நல்லது செய்கிறேன் என்பதற்கு முன், உங்கள் மகனுக்கு / மகளுக்கு நல்லது தானா விருப்பம்தானா எனத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்.<br />
பெற்றோரின் கனவுகள் நிறைவேறவில்லை என்றால் அதை நிறைவு செய்ய பிள்ளைகளை எதிர்பார்ப்பது பெரும் தவறு.<br />
மிரட்டல், அடித்தல், உதைத்தல், காரி துப்புதல், அவமானப்படுத்துதல்
என்றைக்குமே தீர்வாகாது. அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். படிக்க வைக்கவோ
படிப்பை நிறுத்தவோ உங்கள் விருப்பப்படி குழந்தைகள் நடக்கவோ அன்பை மட்டும்
ஆயுதமாக எடுங்கள். ஆனால், அது பிளாக்மெயிலாக இருக்காமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.<br />
இன்று நீங்கள் இல்லை. ஆனால், உங்கள் மகன் இருக்கிறான்.
இருக்கிறான் என்று மட்டுமே சொல்ல முடியும். உயிர் இருக்கிறது இதயம்
துடிக்கிறது. இந்த அடையாளம் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.
இதையெல்லாம் எதையும் அறியாத மனைவி உடன் இருக்கிறாள். அவளும் இருக்கிறாள்
என்றே சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் அவளுக்கும் ஏன் என காரணம் தெரியவில்லை.<br />
இந்தப் பதிவு ஒவ்வொரு பெற்றோருக்கும் சமர்பிக்கிறேன். உங்கள் குழந்தைகள்
உங்கள் மூலமாக வந்தவர்களே தவிர உங்கள் கனவுகளை ஏற்க வந்தவர்கள் இல்லை. இதை
நீங்கள் புரிந்து கொண்டுதான் ஆகவேண்டும்.<br />
நீங்கள் வேறு… உங்கள் குழந்தைகள் வேறு.<br />
தீர்வு என்ன?<br /> ரெய்கியில் அனைத்து சக்கரங்களுக்கு ஹீலிங் தர வேண்டும். முக்கியமாக ஆக்ஞா, அனாஹதம், ஸ்வாதிஷ்டானா, மூலாதாரம்.<br />
கால்களில் புண்கள் இருப்பதால் மூலாதாரத்துக்கு கூடுதலாக ரெய்கி ஹீலிங் தரவேண்டும்.<br />
வெயின்களில் அடைப்பு இருப்பதால் சுஜோக் அக்குபஞ்சரில், சிறுகுடல் மெரிடியனில் தகுந்த புள்ளியில் நீடில் போட வேண்டும்.<br />
பிட்யூட்டரி, பீனியல், அட்ரினல், சிறுநீரகங்கள், கல்லீரல், அடிவயிறு ஆகிய
பகுதிகளுக்கு உள்ளங்கை சுஜோக் அக்கு புள்ளிகள் மூலம் அழுத்தம் தர வேண்டும்.<br />
ஹீலிங் எடுப்பவரின் தனிப்பட்ட முயற்சி மற்றும் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை.
அதுபோல குடும்பத்தின் ஒத்துழைப்பும் ஆகியவற்றைப் பொறுத்தே முழுமையான
தீர்வுக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு கடுமையான முயற்சி தேவை.</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-22203907646070333092019-04-28T02:29:00.000-07:002019-04-28T02:29:01.357-07:00எதிர்மறை_எண்ணங்களை களைவது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும். <br />
எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். <br />
அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். <br />
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்து விடும்.<br />
அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும்.<br />
அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. <br /> ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப்போன்றது.<br />
நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு.<br />
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப் போக்க உதவும் 10 விடயங்கள். <br />
1. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">தியானம்</span></span></a><br />
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம்.<br />
ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.<br />
2. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">புன்னகை</span></span></a><br />
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.<br />
உங்கள் முகத்தை பாருங்கள். <br />
கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை <br /> வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். <br />
சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும்.
சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.<br />
3. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">நண்பர்கள்</span></span></a> <br />
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.<br />
4. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">எண்ணங்களை</span></span></a> நேர்மறைக்கு மாற்றுதல்..<br />
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.<br />
5. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">குறை_கூறாதீர்கள்</span></span></a> <br />
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். <br />
அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு
நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை
நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.<br />
6. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">உதவுங்கள்</span></span></a> <br />
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசை திருப்ப இதை விட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை.<br />
அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி <br /> (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.<br />
7. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8B?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">எது_நடந்ததோ</span></span></a> அது நன்றாகவே நடந்தது..<br />
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. <br />
நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர் கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.<br />
8. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">பாடுங்கள்</span></span></a> <br />
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.<br />
9. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">நன்றி_கூறுங்கள்</span></span></a> <br />
நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். <br />
அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.<br />
10. <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG"><span class="_5afx"><span aria-label="hashtag" class="_58cl _5afz">#</span><span class="_58cm">நல்லதை_படியுங்கள்</span></span></a> <br />
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? <br />
முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். <br />
அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட
எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதே போன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம்
இழுத்து வரும்.<br />
ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? <br />
முடிந்த வரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.<br />
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், <br /> அது சொல்லாக மாறக்கூடும்.<br />
உங்கள் சொற்களை கவனியுங்கள், <br /> அது செயலாக மாறக்கூடும்.<br />
உங்கள் செயல்களை கவனியுங்கள்,<br /> அது பழக்கமாக மாறக்கூடும்.<br />
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், <br /> அது குணமாக மாறக்கூடும்.<br />
உங்கள் குணத்தை கவனியுங்கள், <br /> அது தலைவிதியை மாற்றக்கூடும்...</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-55108754214050454902019-04-28T02:27:00.001-07:002019-04-28T02:27:18.263-07:00மரு போயே போச்சு..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மரு போயே போச்சு..<br />
கழுத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு மிளகு சைஸ்
மருக்கள் பாடாய் படுத்தின. டாக்டரிடம் போனேன்.. வேர் ஆழமா
இருக்கு.அறுத்துடலாம்..ஒரு லோக்கல் அனஸ்திஷியா கொடுத்து எடுத்துடலாம்னார்.<br />
இல்ல டாக்டர் ,வீட்ல சொல்லிட்டு வரலை.நாளைக்கு காலைல வந்துரேன். மறுநாள்
போனேன்.வெயிட் பண்ண சொன்னார்கள்.அருகில் இருந்த தமிழ் இந்துவை
புரட்டினேன்.மூடி வைத்து விட்டு டூட்டி நர்சிடம் ஒரு அவசர அழைப்பு.
அப்புறம் வரேன்.டாக்டர் கிட்ட சொல்லிடுங்க என்றதற்கு பிழைச்சுப்போங்க
என்பது போல பார்த்தார்(ள்)'<br />
<div class="text_exposed_show">
நேராக
ஒரு நாட்டு மருந்துக்கடை.100 கிராம் திப்பிலி அரிசி வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு வந்து நைசாக அரைத்து ,தேனில் குழைத்து மருவை சுற்றி திக் லேயராக
தடவி 20 நிமிடம் கழித்து கழுவினேன். இப்படி நான்கே நாட்கள். <br />
நன்றி!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRzmidVQ63ubDfzMTxLchfzOyAUf3ewZPkLOqhT53mRNvSHGwSW_xy630fe_L_pRo3fe2uEUWcX96flI_YUwGnlHoORi0-QKo5DHZ7E6uNmwiQAI2bM7BalVcZugFgz4E4QwcJdsZGF700/s1600/h.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRzmidVQ63ubDfzMTxLchfzOyAUf3ewZPkLOqhT53mRNvSHGwSW_xy630fe_L_pRo3fe2uEUWcX96flI_YUwGnlHoORi0-QKo5DHZ7E6uNmwiQAI2bM7BalVcZugFgz4E4QwcJdsZGF700/s320/h.jpg" width="320" /></a></div>
</div>
</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-16903629964157632282019-04-28T01:25:00.002-07:002019-04-28T01:25:27.382-07:00இதயம் காக்க சில சித்த வைத்திய முறைகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
* நான்கு அல்லது ஐந்து செம்பரத்தம் பூக்களைத் தினமும் காலை வெறும் வயிற்றில் மென்று தின்று அரை மணி நேரத்துக்குப் பின்னர் உணவு சாப்பிடலாம்.<br /><br />* தாமரைப்பூக்களை புதிதாகப் பறித்து, இதழ்களைத் தனியாக எடுத்து, நிழலில் உலரவைத்து, பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைக்காதவர்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பூவை வாங்கி, சுமார் இரண்டு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, அரை டம்ளராக வற்றும் அளவுக்கு கொதிக்கவைத்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.<br />
<br />
மருதம்பட்டையை (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) 200 அல்லது 300 கிராம் வாங்கி வந்து சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவை மண்சட்டி அல்லது சில்வர் பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்க வேண்டும். அது கால் டம்ளரானதும் வடிகட்டிக் குடிக்க வேண்டும். பிறகு, மாலையில் அதே வடிகட்டிய சட்டியில் உள்ள பட்டைகளில் மீண்டும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது பாதியாகச் சுண்டியதும் வடிகட்டிக் குடிக்கலாம். இப்படி அந்த ஐந்து கிராம் பட்டைகளை மூன்று அல்லது நான்கு நாள்களுக்குப் பயன்படுத்தலாம். பிறகு அவற்றிலிருந்து அதிக சிவந்த சாரம் இறங்காது. பிறகு அவற்றை நீக்கிவிட்டு, புதிதாக ஐந்து கிராம் பட்டைகளைப் போட்டு மேலே சொன்னபடி பயன்படுத்தலாம்.<br /><br />மற்றொருமுறையும் உள்ளது. இந்தப் பட்டைகளை மிக்ஸியில் போட்டுப் பவுடராக்கி கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கால் பாகமாகக் காய்ச்சி வடிகட்டியும் காலை, மாலை குடித்துவரலாம். (ஆரம்பத்தில் இந்தப் பட்டை கஷாயத்தை இருபது மி.லி-யிலிருந்து உயர்த்திப் படிப்படியாக ஐம்பது மி.லி ஆக உயர்த்தலாம். ஏனென்றால் சிலருக்கு வயிற்றைப் புரட்டுவது போலத் தோன்றும், அதன்பிறகு சரியாகிவிடும்).<br /><br />இந்த முறைகள் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து படபடப்பு, வலி போன்றவற்றுக்கு நல்லது. பேஸ்மேக்கர் (Pacemaker) கருவி வைக்கவேண்டிய அவசியம் வராது. இது ஓர் அனுபவ வைத்திய முறை. எல்லோரும் செய்து பார்த்துப் பயனடையலாம்.<br />
<br />
மேற்கூறிய மூன்று முறைகளையும் வாரத்துக்கு ஒன்றாக மாற்றி மாற்றிச் செய்துவந்தால், இதய நோயை வெல்லலாம். இத்துடன் மற்றொரு பழக்கத்தையும் பின்பற்றுவது நல்லது. அது, தினமும் சாப்பிட்டதும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்வது. இது, இதயத்தின் ரத்த அழுத்தம் மற்றும் ஓட்டத்தைச் சரிசெய்யும். ஆனாலும், அடிப்படையான உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். மீறினால் எந்த மருந்து உட்கொண்டாலும் பலனடைவது கடினம். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகள் வியாதிகளை விலைக்கு வாங்குவதற்குச் சமம் என்பதை நினைவில்கொள்வோம்.</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6715978744324004244.post-16881998110727077282019-04-15T05:00:00.001-07:002019-04-15T05:00:06.286-07:00welcome to TNTA HEALTH FORUM<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
WELCOME DEAR FRIENDS</div>
RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARYhttp://www.blogger.com/profile/07328274778623508217noreply@blogger.com0