Pages

Sunday, April 28, 2019

இதயம் காக்க சில சித்த வைத்திய முறைகள்...

* நான்கு அல்லது ஐந்து செம்பரத்தம் பூக்களைத் தினமும் காலை வெறும் வயிற்றில் மென்று தின்று அரை மணி நேரத்துக்குப் பின்னர் உணவு சாப்பிடலாம்.

* தாமரைப்பூக்களை புதிதாகப் பறித்து, இதழ்களைத் தனியாக எடுத்து, நிழலில் உலரவைத்து, பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைக்காதவர்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பூவை வாங்கி, சுமார் இரண்டு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, அரை டம்ளராக வற்றும் அளவுக்கு கொதிக்கவைத்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

மருதம்பட்டையை (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) 200 அல்லது 300 கிராம் வாங்கி வந்து சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவை மண்சட்டி அல்லது சில்வர் பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்க வேண்டும். அது கால் டம்ளரானதும் வடிகட்டிக் குடிக்க வேண்டும். பிறகு, மாலையில் அதே வடிகட்டிய சட்டியில் உள்ள பட்டைகளில் மீண்டும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது பாதியாகச் சுண்டியதும் வடிகட்டிக் குடிக்கலாம். இப்படி அந்த ஐந்து கிராம் பட்டைகளை மூன்று அல்லது நான்கு நாள்களுக்குப் பயன்படுத்தலாம். பிறகு அவற்றிலிருந்து அதிக சிவந்த சாரம் இறங்காது. பிறகு அவற்றை நீக்கிவிட்டு, புதிதாக ஐந்து கிராம் பட்டைகளைப் போட்டு மேலே சொன்னபடி பயன்படுத்தலாம்.

மற்றொருமுறையும் உள்ளது. இந்தப் பட்டைகளை மிக்ஸியில் போட்டுப் பவுடராக்கி கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கால் பாகமாகக் காய்ச்சி வடிகட்டியும் காலை, மாலை குடித்துவரலாம். (ஆரம்பத்தில் இந்தப் பட்டை கஷாயத்தை இருபது மி.லி-யிலிருந்து உயர்த்திப் படிப்படியாக ஐம்பது மி.லி ஆக உயர்த்தலாம். ஏனென்றால் சிலருக்கு வயிற்றைப் புரட்டுவது போலத் தோன்றும், அதன்பிறகு சரியாகிவிடும்).

இந்த முறைகள் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து படபடப்பு, வலி போன்றவற்றுக்கு நல்லது. பேஸ்மேக்கர் (Pacemaker) கருவி வைக்கவேண்டிய அவசியம் வராது. இது ஓர் அனுபவ வைத்திய முறை. எல்லோரும் செய்து பார்த்துப் பயனடையலாம்.

மேற்கூறிய மூன்று முறைகளையும் வாரத்துக்கு ஒன்றாக மாற்றி மாற்றிச் செய்துவந்தால், இதய நோயை வெல்லலாம். இத்துடன் மற்றொரு பழக்கத்தையும் பின்பற்றுவது நல்லது. அது, தினமும் சாப்பிட்டதும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்வது. இது, இதயத்தின் ரத்த அழுத்தம் மற்றும் ஓட்டத்தைச் சரிசெய்யும். ஆனாலும், அடிப்படையான உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். மீறினால் எந்த மருந்து உட்கொண்டாலும் பலனடைவது கடினம். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகள் வியாதிகளை விலைக்கு வாங்குவதற்குச் சமம் என்பதை நினைவில்கொள்வோம்.

0 comments:

Post a Comment